60 நாட்களில் நீங்களும் மூன்று பாடங்களிலும் 80% க்கு மேலதிகமாக புள்ளி பெறலாம்



என்னோட  அனுபவத்தில உங்களுக்கு ஒரு விஷயத்த சொல்லலாம் என்று நினைக்கின்றேன்ஒரு நம்பிக்கையோட இத வாசியுங்கள். அனேகமா உயர்தர  முதலாவதா கேக்குற சந்தேகம் "எப்பிடி உயர்தர பரீட்சைக்கு படிக்கினறது ?" . சரியான கேள்விதான் . இத பிறரிடம கேட்டு தெரிந்து கொள்வத தான் வேண்டும் என்று தெரிந்து கொள்ளகட்டாயம் என்று இல்லை ஆனால் நீங்க நல்ல மதிபெண் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டல் தெரிந்து  கொள்ள தான் வேண்டும். எனவே நமக்கு வரையரை யில்லாத நேரம் இருந்தால் ஏற்கனவே அனுபவமுள்ள வங்களிட்ட எதுவும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு ஒரு வழிமுறையில் முயற்சி செயலாம் அது பிழைக்கும் அல்லது அந்த அளவுக்கு பிறயேகமாக இருக்காது அதனால் இன்னொரு வழிமுறையில் படிவுங்கள்இப்பிடியே செனறு கடைசியில் இதான் படிக்கும் வழிமுறை என்று கண்டுபிடித்து விடுவீர்கள்.இங்க பரீடசைக்கு மிக குறுகிய நேரம்  இருப்பதால். நீங்கள் அந்த வழிமுறை கண்டுபிடித்து படிக்க தெடங்கும் போது பரீட்சை இன்னும் 2/3 கிழமையில் நம்மை பார்து சிரித்து கொண்டு நிற்கும். படிக்கும் வழிமுறை  தெரிந்து படிக்குறதுக்க்கான தேவை என்னவென்ற விஷயம் உங்களுக்கு புரிந்து இருக்கும்

பரீடசைக்கு 6 மாதம் இருக்கு என்டற ஒரு நிலமை வரும் போது ஒரு தனிப்பயம் வரத்தான் செய்யும் , பிறகு கொஞ்சம் கொஞ்சமா நாள் குறைந்து கொண்டே போகும். பாடத்திட்டம் முடிக்க இன்னும் கொஞ்சம் பாடம்  படிக்க வேண்டும் என்று இருக்கும். நாம் ஏதோ படித்த பாடத்தில் எந்த கேள்வி தந்தாலும் விடையளிக்கும் நபர்கள் மாதிரி படிப்பிக்கப்படாத பாடங்களை நினைத்து பயந்து கொண்டு இருப்போம். ஆனால் கேள்வி செய்தால் தான் தெரியும் முன்பு படித்த பாடங்கள் ஒரு கலக்க நிலைதான் இருக்கு, அதிலிருந்து மட்டுமே கேள்வி வந்தால் கூட நம்மளால் முழு  மதிபெண் எடுக்க முடியது என்று. அதனால்  இனிமேல் படிக்கப்போறது இருக்கட்டும், இதுவரைக்கும் படித்த பாடங்களுள் கேள்விகள் செய்து தயார்படுத்தி கொள்ளுங்கள், வருகின்ற சிக்கள்களை (Doubt) எல்லாம் தீர்த்து கொண்டு செல்லுங்கள்.ஒரு கால அட்டவணை ஒன்றை தயார் படுத்திகொள்ளுங்கள். உங்களுக்குத்தான் தெரியும் எந்த நேரம் என்ன பாடம் படித்தால் உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்று. ஒரு கால அட்டவணை கீழ் படியுங்கள்.இதுவரைக்கும் நீங்க செய்த பரீடசைக்கு  விட்ட பிழைகளை விளங்காத கோட்பாடுகளை ( Theory)  விளங்கிகொள்ளுங்கள். அதை  விளங்கிகொள்ளாமல்  மாதிரி  பரீட்சைகளை செய்து எந்த பயனும் இல்லை. பாடங்களை எல்லாம் படித்து முடித்ததும் தான் கேள்வி செய்ய வேண்டும் என்டு நினைக்காமல் மேலோட்டமா படித்துவிட்டு கேள்வி செய்ய தொடங்காலம். சிக்கள் வர வர தீர்த்துகொண்டு செல்லுங்கள், இந்த நேரத்தில் 2005ல் இருந்து 2019 வரைக்கும் நடைபெற்ற கடந்த கால பரீட்சைக்கு வினாக்களுக்கு நேரம் வைத்து பார்பது நன்று. 2 hours கடந்த கால பரீட்சைக்கு 1-1¼ hours நேரம் வைத்து செய்து பாருங்கள்.நேரமும் சரி source உம் சரி வரையறுக்கபட்டு தான் இருக்கும்

அதனை ஒழுங்காக பயன்படுத்துங்கள். பழைய பாடம் தெளிவான என்று தோனும் போது புது பாடதை படிக்க தொடங்குங்கள். பொதுவா கடந்த கால பரீட்சை வினாதாள்களை தெளிவாகி கொண்டு போனால் அதிகமான மதிபெண் பெற முடியும். இதுவரைக்கும் கூறிய விடயங்கள் பௌதிகவியல்,இணைந்த கணிதம் , இரசாயனவியல் க்கு பொருத்தமா இருக்கும். உங்களுக்கான கால அட்டவணை கீழ் படியுங்கள்இன்னும் நேரம் இருகின்றது யாருவெனாலும் நல்லா மதிபெண்பெறலாம். கடந்த கால பரீட்சை முதலில் செய்துபருங்கள். 2000-2019 வரைக்குமான கடந்த கால பரீட்சை வினாதாள்களை செய்துகொள்ளுங்கள், கடந்த கால பரீட்சை வினாதாள்களையும் சேர்த்து கோட்பாடுகளை (Theory) விளங்கிகொள்ளுங்கள். தனியாக குறிப்புகள் படித்துவிட்டுபரீட்சை  செய்யலாம் என்று இருக்க வேண்டாம், அது சாத்தியப்படாதுகடந்த கால பரீட்சை வினாதாள்களை செய்து விளங்கி கொண்டு மாதிரி வினாதாள்களை செய்யுங்கள், அதுவும் விளக்கவுரை இருக்கின்ற வினாதாள்களை மட்டும்நேரம் வைத்து செய்யுங்கள், செய்த வினாதாள்களுக்கு எல்லாம் மதிபெண் இடுங்கள், உங்களை நீங்களே மதிப்பிட்டு கொள்ளுங்கள், முன்வு செய்த வினாதாள்களை நீங்கள் பிழை விட்ட விடயங்களை அடுத்த வினாதாளில் சரியா செய்கின்ற அளவுக்கு விளங்கி படியுங்கள்.நிறைய கேள்விகள் செய்கின்றது முக்கியம் இல்லை. கொஞ்சம் கேள்வி செய்தாலும் பிழை விட்டதெல்லாம் விளங்கி செய்யுங்கள்.Heading la சொல்லியது போல் நடக்க வேண்டும் என்றால் அதுக்கு மருந்து அது உங்க கையில் தான் இருக்கின்றது , கடுமையா உழைப்பால் தான் வெற்றி பெறமுடியும். Hard-work மட்டும் போதாது, கொஞ்சம் smart-work உம் செய்யுங்கள்.சோம் பேறித்தனத்தை எவ்வாறு ஒழிப்பதுமுதலில் சோம்பேறித்தனத்தை இருந்து விடுபட சிறிது சிறிதாக இலக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதுமே ஒரு பெரிய இலக்கை வைத்துக்கொண்டு அதற்காக முயற்சி எடுக்கும் போது நம் மனதில் இதை நம் செய்ய முடியுமா என்ற ஒரு எண்ணம் வந்துவிடும். அதனால் பெரிய இலக்கை வெற்றி பெறுவதற்கு சிறிய சிறிய இலக்கை வைத்து செல்லுவது சிறந்தது. முதலாவது நமது இலக்கு நமக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். பிறருக்கு முக்கியமானதாக இருக்கக்கூடாது உதாரணம் உங்களுடைய பெற்றோர் உங்களை நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்வது இருக்கட்டும் உங்களுடைய பாடசாலையில் உங்களை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவதாக இருக்கட்டும் அதனால் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று  யோசித்தால் நாம் நன்றாக படிக்க முடியாது. உங்களுக்கு சோம்பேறித்தனம் வந்து உங்களை மாற்றிவிடும். ஏனென்றால் அந்த இலக்கு உங்களுடைய இலக்கு அல்ல அதனால் சோம்பேறித்தனம் வந்து விடும். ஒரு இலக்கை வைக்கும்போது உங்களுக்கு அந்த இலக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்று யோசித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு தேவையான விடயங்களை அதில் இணைத்துக் கொள்ள முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு என்னதான் சோம்பேறித்தனம் இருந்தாலும் உங்களது இலக்கை அடைய செல்ல வேண்டிய இடத்தில் சென்று அமர்ந்து விடுங்கள். உதாரணம் ஆறு மணி அளவில் நீங்கள் படிக்க வேண்டும் என்றால் படிக்க வேண்டிய இடத்தில் சென்று அமர்ந்து விடுங்கள். அந்த வேலையை செய்தாலும் செய்யாவிட்டாலும் அந்த இடத்தில் போய் அமர்ந்து விடுங்கள் சிறிது நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்தில் செல்லும்போது படிக்கவேண்டும் என்று உங்களுக்கு இயல்பாகவே தோன்றிவிடும்

ஒரு இலக்கை அடைய செல்லும்போது தேவையில்லாத விடயங்களை விட்டுவிட்டு அந்த இலக்கை அடைவதற்கான விடயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உதாரணம் படிக்கச் செல்லும் போது செல்பேசியை பயன்படுத்துதல் டிவி பார்த்தல் போன்ற தேவையில்லாத விடயங்களை தூக்கி போட்டுவிடுங்கள்அந்த இலக்கை அடைவதற்காக மட்டும் வேலை செய்தால் அந்த இலக்கை கண்டிப்பாக அடையலாம். சோம்பேறித் தனத்தை இல்லாமல் செய்வதற்கு நீங்கள் நீங்களாகவே இந்த நேரத்துக்குள் இந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று ஒரு Check list ஒன்றை தயாரித்துக் கொள்ளுங்கள்.அந்த Check list பார்க்கும்போது உங்களுக்கே தோன்றும் நாம் இந்த நேரத்தில் இதனை செய்து முடிக்க வேண்டும் என்று. அடுத்த விடயம் நாம் அளவாக சாப்பிடுவது மற்றும் உறங்குவது தேவையான வலு உங்களிடம் இல்லை அல்லது தேவையான ஓய்வு உங்களிடம் இல்லை என்றால் உங்களது இலக்கை நோக்கி நீங்கள் செல்லுவதற்கு கடினம். காரணம் தேவையான உறக்கம் உணவு இல்லை என்றால் நமது மூளை சோர்வடையும் இதனால் நமக்கு சோம் பேறித்தனம் ஏற்படும். இதனால் உணவு உறக்கம் மீது சிறிது கவனம் செலுத்துங்கள் இதனை நீங்கள் பின்பற்றினால் உங்களது சோம்பேறி தனத்தை ஒழிக்கலாம். 

Best of luck , Keep practicing 

கருத்துரையிடுக

Post a Comment (0)

புதியது பழையவை